பெற்றோர்களுக்கு செளந்தர்யா ரஜினி கூறும் முக்கிய அறிவுரை!

சமீபத்தில் திருமணமான இயக்குனரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த், கணவர் மற்றும் குழந்தை 'வேத்' ஆகியோர்களுடன் ஒரு புதிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். மேலும் 'கோச்சடையான்', 'வேலையில்லாத பட்டதாரி 2' படங்களை அடுத்து அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை வெப் சீரிஸ் ஆக உருவாக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் மகன் வேத் குறித்த புகைப்படங்களை செளந்தர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து வழக்கமான ஒன்று. சமீபத்தில் கூட ரஜினியின் ஸ்டைலில் மகன் வேத் நின்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்தார். இந்த நிலையில் தற்போது தனது மகன் வேத் நீச்சல் பழகி வருவது குறித்து ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

குழந்தைகளுக்கு இளம் வயதில் நீச்சல் பழகி கொடுக்க வேண்டும் என்றும், நீச்சல் என்பது ஒவ்வொருவரும் பழகிக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம் என்றும், அதே நேரத்தில் குழந்தைகளை விட்டு விலகாது அருகில் இருந்தே அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்' என்று பெற்றோர்களுக்கு நீச்சலின் முக்கியத்துவம் குறித்த தனது அறிவுரையாக செளந்தர்யா குறிப்பிட்டுள்ளார்.