முதன்முதலில் 2வது நாயகன் வேடத்தில் சூரி

  • IndiaGlitz, [Friday,July 15 2016]

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தில் இடம்பெற்ற புரோட்டா காட்சி மூலம் கோலிவுட் திரையுலகில் புகழ் பெற்ற சூரி, தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்நிலையில் அடுத்து ஒப்பந்தமாகியுள்ள ஒரு படத்தில் சூரி, கிட்டத்தட்ட 2வது ஹீரோ போன்ற கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.
'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு', 'ஆறாது சினம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கவுரவ் நாராயணன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தில் தற்போது சூரியும் இணைந்துள்ளார்.
சூரியின் கேரக்டர் குறித்து இயக்குனர் கவுரவ் கூறும்போது, "ஹீரோவின் நண்பராக வந்து அவ்வபோது காமெடி வசனங்கள் பேசும் வழக்கமான வேடத்தில் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை. கதையின் முக்கிய பாத்திரத்தில் அதாவது கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோ என்று சொல்லக்கூடிய கேரக்டரில் சூரி நடிக்கின்றார். இந்த படத்தின் கதையையும், சூரியின் கேரக்டரையும் நான் அவரிடம் கூறியபோது தன்னுடைய கேரியரில் இந்த படம் பெஸ்ட் ஆக இருக்கும் என்று கூறினார்' என்று கவுரவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் இசையமைப்பாளர் உள்ளிட்ட மேலும் சிலர் பணிபுரிவது குறித்து கவுரவ் முடிவு செய்துவிட்டதாகவும் இதுகுறித்த அறிவிப்பை விரைவில் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.