சூரரை போற்று' அடுத்த அப்டேட்டை தந்த ஜிவி பிரகாஷ்!

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப் போற்று’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் இந்த ஒரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருவது தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’மாறாதீம்’ என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் அடுத்த சிங்கிள் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் ’வெய்யோன் சில்லி’ என்று ஆரம்பிக்க இருப்பதாகவும் இந்த பாடலை விவேக் எழுத, ஹரி சிவராம கிருஷ்ணன் என்பவர் பாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பாடலின் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்றும் இந்த பாடலை கேட்க அனைவரும் தயாராக இருங்கள் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார் இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More News

தேசபக்தி என்பது கொல்வதில் அல்ல வாழ்வதில் இருக்கிறது.. அவர் வாழ்வார்...! மகாத்மா காந்தி நினைவு நாள்.

காந்தி எனும் வாழ்க்கைமுறை மக்கள் மனங்களில் நம்பிக்கையாக மாறும் போது மட்டுமே இந்தியா எனும் தேசத்திற்கு பெருமை. ஆம் அவர் வாழ்வார் மக்களின் மனதில் அவர் வாழ்ந்துகொண்டே இருப்பார்.    

விஷ்ணு விஷாலின் அடுத்த படம் குறித்த தகவல்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'எப்.ஐ.ஆர். என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வட்டிக்கு கடன் கொடுத்தேன்.. ஆனால் அது தொழில் கிடையாது..! வருமான வரித்துறையினரிடம் ரஜினிகாந்த் பதில்.

2002-03-ம் நிதியாண்டில் 2 கோடியே 63 லட்சம் ரூபாய் கடன் வழங்கியதாகவும், இதற்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வட்டி பெற்றதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020  - 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய பட்ஜெட்டை வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ்..! 6000 பேர் பாதிப்பு.

கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 170-ஆக உயர்ந்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.