சூரரை போற்று இசை வெளியீட்டு விழா: தமிழ் திரையுலகில் இதுதான் முதல்முறை

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் இசையமைப்பில் உருவாகிய ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நடைபெற்று வருகிறது

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது வரும் 13ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பதால் இந்தப் படத்தின் பல காட்சிகள் விமானத்தில் எடுக்கப்பட்டது என்பதும் அதற்காக ஒரு விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் விமான நிலையத்தில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்தில் படக்குழுவினர் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர். முதன்முதலாக தமிழ் திரைப்படம் ஒன்றின் இசை வெளியீட்டு விழா சென்னை விமான நிலையத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தமிழ் தெலுங்கு பட பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்

More News

சார்ஸ் வைரஸ் பாதிப்பினை மிஞ்சியது கொரோனா வைரஸ் – சீனாவில் 722 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 722 பேர் இறந்துள்ளர். இந்த பாதிப்பு கொரோனா வைரஸ் தொகுதியான சார்ஸ் வைரஸ் பாதிப்பை விட அதிகமானது ஆகும்.

அனுஷ்காவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அனுஷ்கா நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டும், அதன் பின்னர் 2018ல் பாகமதி என்ற திரைப்படமும் வெளிவந்தது. அதன்பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக

'தர்பார்' நஷ்டம் பிரச்சனை குறித்து ஆர்.கே.செல்வமணி கருத்து

ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு சில விநியோகஸ்தர்கள் கூறிவரும் நிலையில் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஆர்கே செல்வமணி கூறியதாவது:

'மாஸ்டர்' படப்பிடிப்பால் நெய்வேலி மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம்: ஆர்.கே.செல்வமணி

விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வந்து கொண்டிருப்பதாகவும்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பிடித்த தனுஷ் பட நாயகி!

இந்தியாவில் உள்ள 30 வயதுக்கு உட்பட்ட சாதனையாளர்கள் பட்டியல் ஒன்றை போர்ப்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்ற ஒரே நடிகை என்ற பெருமை நடிகை சாய் பல்லவி கிடைத்துள்ளது