முதல்முறையாக அரசிடம் சோனுசூட் வைத்த வேண்டுகோள்: செவிசாய்க்குமா அரசு?

  • IndiaGlitz, [Wednesday,August 26 2020]

இந்த கொரனோ காலத்தில் பாலிவுட்டின் வில்லன் நடிகர் சோனு சூட், இந்திய மக்களின் ஹீரோவாக மனதில் பதிந்தார் என்பது தெரிந்ததே. கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர் செய்த உதவிகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இருப்பினும் அவர் இதுவரை அரசிடம் எந்த வித கோரிக்கையையும் சலுகையையும், உதவியையும் எதிர்பார்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் முதல் முதலாக அரசிடம் ஒரு கோரிக்கையை சோனுசூட் முன் வைத்துள்ளார். கொரோனா காலத்திலும் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை நடத்த மத்திய அரசு உறுதியாக இருக்கும் நிலையில் இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்களின் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் வேண்டாம் நடிகர் சோனு சூட் அரசுக்கு தனது சமூக வலைத்தளம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார்

செப்டம்பர் 1 முதல் 6ம் தேதி வரை ஜே.ஈ.ஈ தேர்வுகளும், செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவான வழக்கில் நீதிமன்றம் இந்த தேர்வுகளை நடத்த அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு இந்த தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் கொரோனா காலத்தில் இந்த தேர்வுகளை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனை அடுத்து நடிகர் சோனு சூட் தனது சமூக வலைத்தளத்தில், ‘கொரோனா காலத்தில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் மாணவர்களின் வாழ்க்கையில் நாம் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றும், எனது தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வுகளை சூழ்நிலை கருதி ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்

மக்கள் மனதில் ஹீரோவாக திகழ்ந்து வரும் சோனுசூட் அவர்களின் இந்த கோரிக்கையை அரசு ஏற்று, நீட் மற்றும் ஜே.ஈ.ஈ தேர்வை ஒத்தி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஐஸ்வர்யாராய்? பரபரப்பு தகவல் 

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே.

காதல் கைவிடாது: அதிசயம் நடக்கும்: பீட்டர்பால் உடல்நிலை குறித்து வனிதா

நடிகை வனிதாவை திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர்பால் நேற்று திடீரென நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து

பாரில் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் பிரபல நடிகை: வைரலாகும் புகைப்படங்கள்

இலங்கையைச் சேர்ந்த பிரபல நடிகை பியுமி ஹன்சமலி ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கங்கனா ரனாவத் நெற்றியில் ஏற்பட்ட ரத்தக்காயம்: வைரலாகும் புகைப்படம்

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் விஜய் இயக்கத்தில் 'தலைவி' என்ற திரைப்படத்தில் நடித்து வருபவருமான நடிகை கங்கனா ரனவத், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் காயம் பட்ட ஒரு புகைப்படத்தை

ரஜினியிடம் அரசியல் குறித்து பேசியதில்லை: பாஜகவில் இணைந்த அண்ணாமலை பேட்டி

நடிகர் ரஜினிகாந்திடம் அரசியல் குறித்து நான் எதுவும் பேசவில்லை என்றும் ஆன்மீகம் குறித்து மட்டுமே பேசி இருப்பதாகவும் அவரின் அரசியல் வருகைக்காக தான் காத்திருப்பதாகவும்