close
Choose your channels

பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

Wednesday, March 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெற்ற தாயை மதுவுக்காக கொலை செய்த மகன்

குடிகார மகனை தாய் கண்டிப்பதைத்தான் இதுவரை நாம் பார்த்துள்ளோம். ஆனால் மதுவுக்காக மல்லுக்கட்டி பெற்ற தாயை மகனே கொலை செய்த  அதிர்ச்சி சம்பவம் சென்னை அருகே நடந்துள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் கலாவதி என்பவர் தனது மகன் நீலகண்டனுடன் வாழ்ந்து வந்தார். இருவருக்குமே மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீலண்டன் குடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த மதுவை கலாவதி எடுத்து குடித்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த நீலகண்டன் தனது தாயை அடித்துள்ளார். இதனால் மதுபோதையில் இருந்த கலாவதி தடுமாறி கீழே விழுந்தார். மயங்கி விழுந்த பின்னரும் விடாமல் அடித்த நீலகண்டன் தாயின் முடியை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதனால் மண்டை உடைந்து கலாவதி பரிதாபமாக பலியானார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நீலகண்டன் தப்பிக்க முயற்சித்தபோது, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் நீலகண்டனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஒரு பாட்டில் மதுவுக்காக பெற்ற தாயை கொலை செய்த மகனுக்கு இனிவாழ்நாள் முழுவதும் களிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment