close
Choose your channels

ரஜினியை சந்தித்த சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம்.. படம் தயாரிக்க திட்டம் என தகவல்..!

Saturday, December 16, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சாப்ட்வேர் நிறுவனத்தின் பிரபலம் ஒருவர் சந்தித்ததாகவும் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தின் சிஇஓ பாபி பாலச்சந்திரன் என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். இவர் விரைவில் வெளியாக இருக்கும் அருள்நிதி நடித்த ’டிமான்டி காலனி 2’படத்தின் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி உடன் ஆன சந்திப்பு குறித்து அவர் கூறுகையில் ’நான் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன், ஆனால் அதே நேரத்தில் அவரது எளிமை மற்றும் பணிவு ஆகியவற்றை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். நாங்கள் இருவரும் சில நிமிடங்கள் சினிமா குறித்தும் இருவரும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் பேசினோம். அவர் ’டிமாண்ட் காலனி 2’ படத்தின் டிரைலர் வெளியீட்டுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் என்று கூறினார்.

இன்று ’டிமான்டி காலனி 2’ படத்தின் டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் அதன் தயாரிப்பாளர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment