நாங்க செஞ்ச தவற செஞ்சுடாதீங்க: 'பிக்பாஸ் 2' போட்டியாளர்களுக்கு சினேகன் அறிவுரை

  • IndiaGlitz, [Saturday,June 16 2018]

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் என்பது சஸ்பென்ஸ் ஆக இருந்தாலும் போட்டியாளர்களில் பெரும்பாலும் செலிபிரிட்டியாகத்தான் இருப்பார்கள் என்பதே அனைவரின் யூகமாக உள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை தாக்குப்பிடித்த சினேகன், இந்த இரண்டாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சில அறிவுரைகளை கூறியுள்ளார். அவர் கூறியுள்ள முக்கிய அறிவுரைகளில் ஒன்று 'போட்டியாளர்கள் அவர்களாகவே இருப்பதைத்தான் மக்கள் விரும்புவார்கள். நல்லவரோ கெட்டவரோ உங்கள் இயல்பு தன்மை மாறாமல் இருங்கள். நல்லவர் போல் வேஷம் போட வேண்டாம். மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். நீங்கள் இயல்பை மீறி வேஷம் போட்டாமல் உங்கள் சுயரூபம் ஒருநாள் வெளிப்படும்போது மக்களின் வெறுப்பிற்கு ஆளாவீர்கள்' என்பதுதான்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் சூத்திரமே நம்முடைய இயல்பில் இருந்து மாறாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இது தெரியாமல் தான் நாங்கள் இருந்தோம். அதனால் நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்ய வேண்டாம். மேலும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒருவகையில் கொடுத்து வைத்தவர்கள். உள்ளே எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லி கொடுத்துள்ளோம் என்று சினேகன் கூறியுள்ளார்.

More News

கமல் நன்றி சொல்ல வேண்டியது குமாரசாமிக்கு அல்ல: தமிழிசை

கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடாத காரணத்தால் தமிழக விவசாயிகளின் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மேட்டூர் அணையில்

அறிவியல் வளர்ந்த அளவு இதயம் வளரவில்லையே! நடிகர் விவேக் வேதனை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உயர் சாதியினருக்கு சொந்தமான கிணற்றில் குளித்த தலித் சிறுவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் குறித்த வீடியோ ஒன்று நேற்று பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

அடுத்த கட்டத்திற்கு சென்ற 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'செக்க சிவந்த வானம்'.

தனுஷின் 'மாரி 2' படத்தில் இணைந்த மேலும் ஒரு நடிகை

தனுஷ் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் வரலட்சுமி சரத்குமார்

தண்ணீர் திறந்துவிட்ட கர்நாடகத்திற்கு நன்றி கூறிய கமல்

நடிகரும் அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடந்த வாரம் பெங்களூர் சென்று கர்நாடக முதல்வரை சந்தித்து காவிரி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.