பிரசன்னாவுக்கு சர்ப்ரைஸ் வாழ்த்து கூறிய சினேகா!

  • IndiaGlitz, [Saturday,August 28 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரசன்னா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்தவகையில் பிரசன்னாவின் மனைவியும் நடிகையுமான சினேகா, தனது மகனின் பிறந்த நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்து தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறார்

நீங்கள் ஒரு சரியான நபராக இல்லாமல் இருக்கலாம், நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் எல்லாம் சரியாக இல்லாமல் இருக்கலாம், நம் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் சண்டைகள் ஏற்பட்டு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் கண்டிப்பாக தேவை. எது எப்படி இருந்தாலும் நான் உங்களை எப்பொழுதும் நேசிப்பேன். உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்து உள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள பிரசன்னா ’நான் உன்னை வாழ்க்கை துணையாக பெற்ற பின்னர்தான் நல்ல மனிதராகவும் நல்ல வளர்ச்சியையும் பெற்றுள்ளேன் கண்ணம்மா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரலாகி வருகிறது

மணிரத்னம் தயாரிப்பில் உருவான ’பைவ் ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான பிரசன்னா, அதன்பின் ஹீரோ, குணச்சித்திரம், வில்லன் என பல்வகை கதாபாத்திரங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிரசன்னா, ‘துப்பறிவாளன் 2’, உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வாத்தி கம்மிங்' ஸ்டைலில் 'சின்னத்தல': வைரல் புகைப்படம் 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' என்ற பாடல் தமிழகம்,

பிறந்த நாளில் சாந்தனுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாக்யராஜ்!

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூட விடுமுறை எடுக்காமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சாந்தனுவுக்கு அவரது தந்தை கே பாக்யராஜ் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட படுகாயம் அடைந்த புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!

விஜய் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

துள்ளிக்குதிக்கும் ஆப்கன் குழந்தை… கண்ணீரால் நனையும் நெட்டிசன்ஸ்!

தாலிபான்களுக்கு பயந்த பல ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது கிடைக்கும்

ஒரு சாப்பாடு ரூ.7,500? ஒட்டுமொத்தமாக சுரண்டப்படும் ஆப்கன் அப்பாவிகள்!

காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகும் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.