ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயம் ராஜா இயக்கவுள்ள சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், வில்லனாக பஹத் பாசிலும் நடிக்கவுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் தற்போது 'புன்னகை அரசி' என்று போற்றப்படும் சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். குழந்தை பிறந்தவுடன் சமீபகாலமாக திரையுலகில் இருந்து விலகியிருந்த சினேகா தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி ஆவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேலும் நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினியாக இருந்தாலும் சினேகாவுக்கு இந்த படத்தில் கதையுடன் ஒன்றிப்போகும் அளவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும் அவருடைய கேரக்டர்தான் கதையை நகர்த்தி செல்லும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.