சென்னை திரும்பிய 'எஸ்கே 21' படக்குழு.. சாய்பல்லவியுடன் அடுத்தகட்ட படப்பிடிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்த நிலையில் தற்போது காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் உட்பட படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

போர் சம்பந்தப்பட்ட கதையம்சம் கொண்ட இந்த படத்தில் மிகவும் பிரமாண்டமாக ஒரு போர்க்காட்சியை உருவாக்கப்பட இருப்பதாகவும் இந்த காட்சி தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை திரும்பிய படக்குழு அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும், இதில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சென்னை படப்பிடிப்பை முடித்த உடன் மீண்டும் படக்குழு காஷ்மீர் செல்ல இருப்பதாகவும், அப்போது தான் போர்க் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இந்த படம் ஒரு மிகச்சிறந்த படமாக இருக்கும் என்றும் மாவீரன் வெற்றியை அடுத்து இந்த படம் மேலும் ஒரு வெற்றியை சிவகார்த்திகேயனுக்கு பெற்றுக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

6 வாரங்களுக்கு முன்பே முன்பதிவு.. வெளிநாட்டில் 'லியோ' செய்யும் சாதனை..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். மேலும் இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி

'லியோ' ஆடியோ லான்ச் நிலாவுல நடக்கும்.. ரஜினியை நினைச்சா கேவலமா இருக்குது: மன்சூர் அலிகான் பேட்டி..!

 'லியோ' படத்தின் ஆடியோ லான்ச் நிலாவில் சந்திராயன் அருகில் நடக்கும் என்றும் ரஜினிகாந்த்,  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது கேவலமாக இருக்கிறது என்றும் நடிகர் மன்சூர் அலிகான்

குழந்தைகளுடன் சைக்கிள் ரைட் செய்த அஜித்.. வைரல் வீடியோ..!

நடிகர் அஜித் ஒரு மோட்டார் பைக் ரைடர் என்பதும் கார் ரேஸில் ஈடுபடுவதில் வல்லவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அவர் குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது  

சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் வியக்க வைத்த லைக்கா சுபாஷ்கரன்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சந்திரமுகி 2' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

ராகவா லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி கொடுத்த சுபாஷ்கரன்..!

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'சந்திரமுகி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் லைகா நிறுவனத்தின் சேர்மன் சுபாஷ்கரன் கலந்து கொண்டார்.