சிவகார்த்திகேயன் - பிஎஸ் மித்ரன் பட டைட்டில் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Tuesday,March 12 2019]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கிய 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மே 1 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் 'இரும்புத்திரை' இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் ஒரு படமும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் - பிஎஸ் மித்ரன் இணைந்த 'எஸ்.கே 15' திரைப்படத்தின் டைட்டில் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இதனை கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளது. நாளை பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் நாள் என்றும், பூஜையின்போதே இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியர்தர்ஷன் நடிக்கவுள்ள இந்த படம் யுவன்ஷங்கர் ராஜா இசையில் ஜார்ஜ் ஒளிப்பதிவில் உருவாகவுள்ளது. இந்த படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மற்றும் 'நாச்சியார்' நடிகை இவானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

More News

நிர்பயாவுக்கு கொடுத்த முக்கியத்துவம் தமிழக பெண்களுக்கு கொடுக்காதது ஏன்? நீதிபதிகள் வேதனை 

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பேருந்து ஒன்றில் ஐவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் இளம் இசையமைப்பாளர்.

சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த தயாரிப்பு படத்தில்  புரொடக்சன்ஸ் "தயாரிப்பு எண் 2" படத்தில்

பொள்ளாட்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசுக்கு ஜாமீனா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தையே உலுக்கி வரும் பொள்ளாட்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரீசன் உள்பட 4 பேர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்

தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்த விஜய்சேதுபதி!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணையும் சூர்யா-மாதவன்

'ஆயுத எழுத்து' திரைப்படத்தில் சூர்யாவும் மாதவனும் முதல்முறையாக இணைந்து நடித்தனர். அதன்பின் கமல்ஹாசன், மாதவன் நடித்த 'மன்மதன் அன்பு' படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.