close
Choose your channels

எஸ்.ஜே.சூர்யா படத்தில் அறிமுகமான 40 வயது நடிகைக்கு திருமணம்.. வைரல் புகைப்படம்..!

Wednesday, March 13, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா படத்தில் அறிமுகம் ஆகி அதன் பின் தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த 40 வயது நடிகைக்கு தற்போது திருமணம் ஆகி உள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எஸ்ஜே சூர்யா நடித்த இயக்கிய ’அன்பே ஆருயிரே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிலா. இவர் அதன் பின் ’ஜாம்பவான்’ ’காளை’ ‘ஜகன்மோகினி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நிலையில் மீரா சோப்ரா என்ற பெயரில் பாலிவுட்டில் பல படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை நிலா தனது சமூக வலைதள பக்கத்தில் தான் ஒருவரை காதலித்து வருவதாகவும் அவரையே விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் கூறியிருந்த நிலையில் நேற்று இந்த திருமணம் ராஜஸ்தானில் நடைபெற்று உள்ளது.

ரஷீத் என்பவரை நிலா திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களை நிலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் திருமண நல்வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த திருமண விழாவில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment