ஒரே நாளில் டப்பிங் முடித்த எஸ்.ஜே.சூர்யா.. ஓநாய் கேரக்டர் சிறப்பு தோற்றமா?

  • IndiaGlitz, [Saturday,July 20 2024]

நடிகர் எஸ்ஜே சூர்யா ’ராயன்’ படத்தின் டப்பிங் பணியை ஒரே நாளில் முடித்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பதை அடுத்து அவர் அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்துள்ளாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

தனுஷ் நடித்து, இயக்கிய ’ராயன்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகி உள்ள நிலையில் வரும் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தில் நடித்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி அளித்த எஸ்ஜே சூர்யா, ’ராயன்’ திரைப்படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு ஒரே நாளில் டப்பிங் பணியை முடித்து விட்டதாக தெரிவித்தார்.

’ மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் டப்பிங் பேசியபோது தனது குரல் பாதித்துவிட்டதாகவும் ஆனால் ’ராயன்’ படத்தில் தனக்கு ஒரே நாளில் வேலை முடிந்து விட்டது என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது ஓநாய் கேரக்டருக்கான காட்சிகள் மிகவும் குறைவாக இருக்குமா, எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தான் நடித்து உள்ளாரா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் இதற்கு விளக்கம் அளித்த எஸ்.ஏ.சூர்யா, ’ராயன்’ படத்தில் எனக்கான காட்சிகள் அதிகம் இருக்கிறது, ஆனால் அதே நேரத்தில் பெரும்பாலான காட்சிகள் முக பாவனைகளில் மட்டுமே இருக்கும், மிக குறைவான வசனம் மட்டுமே இருப்பதால் ஒரே நாளில் டப்பிங் முடித்து விட்டது’ என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலரில் ஓநாய் தந்திரமாக செயல்பட்டால் சிங்கத்தையே வீழ்த்தி விடும் என்ற வசனம் இருந்த நிலையில் அந்த ஓநாய் கேரக்டரில் தான் எஸ்ஜே சூர்யா நடித்திருக்கிறார் என்பது இந்த பேட்டியில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.