எனக்கு ஆண்மை இல்லை: சிவசங்கர் பாபாவின் அதிரடி வாக்குமூலம்! 

  • IndiaGlitz, [Monday,August 23 2021]

எனக்கு ஆண்மை இல்லை என்றும் ஆண்மை இல்லாத என்னால் எப்படி பாலியல் உறவில் ஈடுபட முடியும் என்றும் சிவசங்கர் பாபா பரபரப்பு வாக்குமூலம் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவசங்கர் பாபா ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுதள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையில் தனக்கு ஆண்மை இல்லை என சிபிசிஐடி போலீஸாரிடம் சிவசங்கர் பாபா வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆண்மை இல்லாத நான் எப்படி பாலியல் தொந்தரவுகளில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்து வரும் நீதிபதிகள் ’மகன் மற்றும் மகள் உள்ளபோது ஆண்மையற்றவர் என்று எப்படி கூற முடியும்? என்று கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவும் இதேபோன்று தனக்கு ஆண்மை இல்லை என்று கூறி வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பாரதிராஜா: காரணம் இதுதான்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் திறக்க தமிழக அரசு

ஒரே மாதத்தில் முடிவடைந்த ஆர்.கண்ணனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

கடந்த 1972ஆம் ஆண்டு ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான 'காசேதான் கடவுளடா' என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கிய நிலையில்

ஆப்கானிஸ்தான் விவகாரத்தால் நிச்சயதார்த்தத்தை கேன்சல் செய்யும் பிக்பாஸ் நடிகை?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணத்தால் தனது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை ரத்து செய்ய திட்டமிட்டிருப்பதாக வெளிவந்தது செய்தி பெரும் பரபரப்பை

கங்கனாவின் ‘தலைவி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ளதால் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய மனைவி!

சன் டிவியில் கடந்த 90களில் பிரபலமான ஆனந்த கண்ணன் கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி சின்னத்திரை மற்றும் பெரிய திரை உலகினர்களை உலுக்கியது