'நான் பெரிய நடிகரா ஒப்புக்கொண்டது இந்த ரெண்டு பேரை மட்டும் தான்: சிவகுமார்

  • IndiaGlitz, [Sunday,January 08 2023]

நான் பெரிய நடிகராக ஒப்புக் கொண்டது இந்த இரண்டு நடிகர்களை மட்டும் தான் என்றும் அந்த பட்டியலில் என்னுடைய பெயர் கூட இல்லை என்றும் பழம்பெரும் நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பழம்பெரும் நடிகர் சிவகுமார் சமீபத்தில் திருக்குறள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது, ‘நான் 195 படங்களில் நடித்துள்ளேன், எனக்கு திருமணம் ஆனது, குழந்தை குட்டிகள் பெற்றது, பணம் சம்பாதித்தது, இந்த அளவுக்கு புகழ் பெற்றது எல்லாமே சினிமாவில் இருந்து தான் வந்தது. ஆனால் என்னையே நான் பெரிய நடிகர் என்று சொல்ல மாட்டேன்.

நான் பெரிய நடிகர் என்று ஒப்புக்கொண்டது இரண்டே இரண்டு பேர்களை மட்டும் தான், அவர்கள் ஒன்று சிவாஜி கணேசன் இன்னொன்று கமல்ஹாசன். அதற்காக மற்ற நடிகர்களை நான் குறை சொல்லவில்லை. அவரவர் திறமைக்கேற்ப நடித்தார்கள், ஆனால் என்னுடைய பெரிய நடிகர்கள் என்ற பட்டியலில் இந்த இரண்டு பேர்கள் தான் உண்டு என்று கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் நான் நடிகன் என்பதை விட நான் வரைந்த ஓவியங்கள் மற்றும் நான் பேசிய சொற்பொழிவுகளை நான் பெருமையாக கருதுகிறேன் என்றும் சிவகுமார் கூறினார்.