நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை.. சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் நாயகி இவரா?

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு திரைப்படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படும் நிலையில் அவரை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகை, சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ’டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சிபி சக்கரவர்த்தி திரைக்கதை அமைக்கும் பணியை முடித்துவிட்டு, வசனம் எழுதும் பணியை தொடங்கி விட்டதாகவும் கூடவே இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வையும் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான ’அனிமல்’ படத்தின் வெற்றியை அடுத்து நயன்தாராவை விட அதிகம் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் ராஷ்மிகா, சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தில் இணைவதை அடுத்து அந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

பிரதமர் மோடி பயோபிக் படத்தில் தமிழ் நடிகர்.. எப்படி ஒப்புக்கொண்டார் பகுத்தறிவு நடிகர்?

பாலிவுட்டில் பிரமாண்டமாக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரிக்கப்பட உள்ள நிலையில் இந்த படத்தில் மோடி கேரக்டரில் நடிக்க தமிழ் நடிகர் ஒருவர் ஒப்புக்கொண்டது

சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. 40வது படத்தில் அடியெடுத்து வைக்கும் ஹீரோ..!

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' என்ற வெற்றி திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல ஹீரோ  

விஜய்சேதுபதியின் 'ஏஸ்'ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள சுவாரஸ்யமான  விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து அஜித்.. மக்கள் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ,அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக

'கோட்' படத்தின் முக்கிய பணி முடிந்தது.. வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்தி வெளியான நிலையில் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக VFX