ரஜினியின் '2.0' படம் குறித்து சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Saturday,November 24 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0; திரைப்படம் வரும் வியாழன் அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் உலகம் முழுவதும் பிரமாண்டமாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் குறித்து பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது:

இந்திய சினிமாவின் மேதைகளான ரஜினிகாந்த், ஷங்கர், அக்சயகுமார், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள பிரமாண்டமான படம் '2.0'. இந்த படத்தை கோடிக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ஆவலுடன் உள்ளேன்.

இப்படி ஒரு பிரமாண்டமான படத்தை தயாரித்து மக்களுக்கு அளிக்க ஒரு தனி திறமையும் ஒரு நல்ல டீமும் தேவை. அந்த வகையில் லைகா நிறுவனத்திற்கு இப்படி ஒரு நல்ல டீம் அமைந்துள்ளது. லைகா நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.

மேலும் லைகா நிறுவனத்தின் சுபாஷ் மற்றும் கருணாகரன் ஆகியோர்களுக்கு சினிமா மீது ஃபேஷன் இந்த படத்தின் மூலம் தெரிகிறது. ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்து வந்த கிராபிக்ஸ் காட்சிகள் ஒரு தமிழ்ப்படத்தில் இருப்பது நமக்கு பெருமையாக உள்ளது. இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும், அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது. எனக்கும் அந்த உத்வேகம் ஏற்பட்டது என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

More News

ரஜினி, விஜய் நிவாரண உதவி குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

கமல் இன்னும் களத்தூர் கண்ணாம்மா குழந்தையாகவே இருக்கின்றார்: அமைச்சர் ஜெயகுமார்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய கமல்ஹாசனுக்கும் ஆளும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருப்பது தெரிந்ததே

டெல்டா விவசாயிகளின் வங்கிக்கடனை ரத்து செய்ய வேண்டும்: பிரபல இயக்குனர் கோரிக்கை

சமீபத்தில் கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு சென்ற நிலையில் நிவாரண பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வந்தாலும்

இயக்குனர் முத்தையாவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு

'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடி வீரன்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா கடந்த சில மாதங்களாக 'தேவராட்டம்' என்ற படத்தை இயக்கி வந்தார்.

'மாரி 2'வை அடுத்து ரிலீசுக்கு தயாரான தனுஷ் படம்

தனுஷ் நடித்த 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்டு இந்த படத்தின் புரமோஷனும் முழுவீச்சில் நடந்து வருகிறது.