சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,June 03 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' சமீபத்தில் வெளியான நிலையில் அவர் தற்போது நான்கு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாருடன் ஒரு படம், 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் என படுபிசியாக உள்ளார்.

இந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் தயாரித்த இரண்டாவது படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் மூன்றாவது படத்தை 'அருவி' பட இயக்குனர் அருண்பிரபு இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் குறித்த கூடுதல் விபரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் தனது முந்தைய படமான 'மிஸ்டர் லோக்கல்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இனிவரும் தனது படங்கள் அனைத்தும் நல்ல வெற்றியை பெறும் என்றும், 'நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா' என்ற பஞ்ச் உடன் தனது பேச்சை முடித்து கொண்டார்