'தனி ஒருவன்' நிறுவனத்துடன் கனெக்சன் ஆன சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Sunday,August 14 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகள் போட்டி போட்டு வியாபாரம் ஆகிவருகின்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர் அவ்வப்போது இந்த படத்தின் ரிலீஸ் உரிமைகளை பெற்ற விநியோகிஸ்தர்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் அனைவரும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெறுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தற்போது செங்கல்பட்டு ஏரியா ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான 'தனி ஒருவன்' உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் 'ரெமோ' படத்தின் செங்கல்பட்டு உரிமையை பெற்றுள்ளது. எனவே செங்கல்படு பகுதியில் இந்த படத்தின் ரிலீஸ் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
24 ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ள் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

More News

கோலிவுட்டில் எண்ட்ரி ஆகும் பார்த்திபனின் இன்னொரு வாரிசு

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், சிறந்த மேடைப்பேச்சாளர், கவிஞர் என பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து வரும் பார்த்திபன், 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்'...

விஜய்யின் தெறி'க்கு அடுத்து கார்த்தியின் 'காற்று வெளியிடை

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பைலட் வேடத்தில் கார்த்தி நடித்து வருவது அனைவரும் அறிந்ததே...

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகையின் மகள்

சீயான் விக்ரம் நடித்து முடித்துள்ள 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ்...

அருண்விஜய்யின் 'டீலுக்கு' கிடைத்த பாசிட்டிவ் ரிசல்ட்

அஜித்தின் 'என்னை அறிந்தால்' படத்தில் 'விக்டர்' என்ற நெகட்டிவ் கேரக்டரில் நடித்த பின்னர் கோலிவுட் திரையுலகில் அருண்விஜய்யின்...

விபத்தில் இறந்த தொழிலாளியின் குழந்தைகளுக்கு விஷால் உதவி

சமீபத்தில் ஐ.டி. பெண் ஊழியர் ஒருவர் ஓட்டி வந்த கார் ஒன்று தொழிலாளி முனுசாமி என்பவரது மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில்...