'இன்று நேற்று நாளை' இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன்

  • IndiaGlitz, [Tuesday,January 05 2016]

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் விஷ்ணு, மியார் ஜார்ஜ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஆர்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகிய 'இன்று நேற்று நாளை' திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் 'இன்று நேற்று நாளை' இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியது.


இந்நிலையில் இயக்குனர் ரவிகுமாரின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஆர்.டி.ராஜாவின் 24AM ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் திருநாள் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'நேற்று இன்று நாளை' போலவே இந்த படமும் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படமா? என்பது விரைவில் தெரியவரும்.

More News

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' குறித்த முக்கிய அறிவிப்பு

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டே படத்தின் வெற்றியின் மூலம் ரஜினி, விஜய் படங்களை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில்...

அஜித்துக்கு ரசிகராக மாறிய பிரபல மலையாள நடிகர்

தல அஜித்தின் பெயர் மற்றும் படக்காட்சிகளை தங்கள் படங்களில் பயன்படுத்தி புரமோஷன் செய்யும் கோலிவுட் நடிகர்கள் பலரை நாம் பார்த்துள்ளோம்....

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் தேதி?

கடந்த 2015ஆம் ஆண்டில் நான்கு வெற்றி படங்களை கொடுத்த ஜெயம் ரவியின் அடுத்த படமான 'மிருதன்' தமிழில் வெளிவரும் முதல் 'ஜோம்பி' படம் என்று...

பொங்கலுக்கு உதயநிதி தரும் டபுள் ட்ரீட்

உதயநிதி ஸ்டாலின், எமிஜாக்சன் நடித்த 'கெத்து' படம் வரும் பொங்கல் தினத்தில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது...

தற்காப்புக்காக பி.வாசு எழுதிய கடிதம்

கோலிவுட்டின் பிரபல இயக்குனர் பி.வாசு கடந்த பல வருடங்களாக வெற்றி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே...