சிவகார்த்திகேயனின் புதிய படம்.. இயக்குனர் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ’எஸ்கே23’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் ஏற்கனவே சூரி நடித்து வரும் ’கொட்டுக்காளி’ என்ற படத்தை தயாரித்து வரும் நிலையில் தற்போது ’குரங்கு பெடல்’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த படம் குறித்த டைட்டில் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவின்படி இந்த படத்தை இயக்குபவர் கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்றும் இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தின் டைட்டில் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் தரமான சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய்க்கு என அட்வைஸ் இதுதான்: நடிகர் கார்த்திக்

நடிகர் கார்த்திக் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு எனது அட்வைஸ் இது தான் என்று கூறியுள்ளார்.

வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள்,ப்ளூடூத் மூலமாக கட்டுப்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு ஆசிரியை.

ஒரு மனிதனின் அறிவு திறனை அப்படியே ஒரு கணினிக்கு கொடுத்தால் என்ன ஆகும் ?அதன் வெளிப்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதன் தேடலே இந்த செயற்கை நுண்ணறிவு...

போடுறா வெடிய... 'கோட்' ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட்பிரபு.. சரியான பண்டிகை நாள் தான்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது.

சன் டிவி சீரியலில் இருந்து திடீரென விலகிய ஷபானா. கர்ப்பம் காரணமா? அவரே அளித்த பதில்..!

ஜீ டிவியில் ஒளிபரப்பான 'செம்பருத்தி' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஷபானா தற்போது சன் டிவியில் பிரபலமான சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அந்த

போட்டோகிராபர் கொடுத்து வச்சவர்.. சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் வைரல்..!

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 'போட்டோகிராபர் ஆவது எப்படி' 'போட்டோகிராபர் கொடுத்து வச்சவர்' போன்ற