சிவகார்த்திகேயன் - நயன்தாரா படப்பிடிப்பு தொடங்கும் நாள் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் இதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.,
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தகவலை 24ஏம் நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் பகத் பாசில், சினேகா, ரோஹினி, சதீஷ், பிரகாஷ்ராஜ், தம்பிராமையா மற்றும் ஆர்ஜே பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். 'ரெமோ' போலவே இந்த படமும் சிவகார்த்திகேயன் டீமுக்கு வெற்றிப்படமாக அமைய நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.