மார்ச் 18ல் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் படம்!

  • IndiaGlitz, [Friday,February 25 2022]

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் மார்ச் 18ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அருண் காமராஜ் இயக்கத்தில் உருவான ’கனா’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்றது என்பதும் தற்போது இந்த பணிகள் முடிவடைந்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சீனா முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் இந்தப் படம் மார்ச் 18ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

டங்கல், பிகே, பாகுபலி, மாம் உள்பட ஒரு சில குறிப்பிட்ட இந்திய திரைப்படங்களே சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் ’கனா’ திரைப்படமும் அந்த வரிசையில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இந்த பிரபல நடிகரா?

சிம்பு நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான 'மாநாடு' திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

திரையில் தான் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி: பிரபல நடிகரை விமர்சனம் செய்த நடிகை

 திரையில்தான் அவர் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பிரபல நடிகரை நடிகை ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ரிலீஸ் தள்ளி போகிறதா?

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் மார்ச் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

நிரூப்புக்கு அபிராமி கொடுத்த அழுத்தமான முத்தம்: மீண்டும் மலர்கிறதா காதல்?

பிக்பாஸ் போட்டியாளர்களான நிரூப் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற நிலையில் தற்போது நிரூப்புக்கு அபிராமி அழுத்தமான முத்தம் கொடுத்து உள்ளதால் மீண்டும் காதல் மலர்கிறதா?