நயன்தாராவுக்காக பாடலாசிரியராக மாறிய பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Saturday,May 12 2018]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று 'கோலமாவு கோகிலா' என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் இரண்டாவது சிங்கிள் படம் வரும் 17ஆம் தேதி வெளியிடவுள்ளதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறித்த செய்தியை பார்த்தோம்

இந்த நிலையில் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை அனிருத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அனிருத் கம்போஸ் செய்யும் பாடலுக்கு சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதுவது போன்ற காட்சி உள்ளது. 'எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்துடுச்சுடி' என்று இந்த பாடலின் வரிகள் தொடங்குவதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நடிகர், தயாரிப்பாளர் ஆகியவற்றை அடுத்து பாடலாசிரியாராக, அதுவும் நயன்தாரா படத்திற்காக பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் மாறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகி நயன்தாரா என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

More News

இது ஆடுபுலி ஆட்டம் இல்ல! சண்டக்கோழி 2 டிரைலர் விமர்சனம்

விஷால், மீரா ஜாஸ்மின் நடித்த 'சண்டக்கோழி' படத்தின் இரண்டாம் பாகமான 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி விஷால் ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

நானும் இதை சந்தித்துள்ளேன்: படுக்கை அழைப்பு குறித்து காலா நாயகி

கடந்த சில மாதங்களாக படுக்கைக்கு அழைக்கும் விவகாரம் குறித்து கோலிவுட் முதல் ஹாலிவுட் வரையில் உள்ள  நடிகைகள் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

திருமண பேனர் வைப்பதில் தகராறு: வாலிபரை ஓட ஓட வெட்டி கொலை செய்த கும்பல்

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் திருமண போஸ்டர் ஒட்டும் தகராறு ஒன்றில் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரை ஓட ஓட வெட்டி கொலை செய்தனர்.

ஆட்சியை பிடிக்க முடியாது, ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்: ரஜினி குறித்து அமைச்சரின் சர்ச்சை பேட்டி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்திருந்தால் சமீபத்தில் நடந்த 'காலா' இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

'பாசமலர்' காட்சிகள் ஏன் இல்லை? 'நடிகையர் திலகம் இயக்குனர் விளக்கம்

நடிகை சாவித்திரி என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது பாசமலர் படம்தான். சிவாஜி கணேசனும் சாவித்திரியும் அந்த படத்தில் போட்டு போட்டு நடித்திருப்பார்கள்.