சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' 3வது சிங்கிள் பாடல்.. எழுதி, பாடியது இந்த பிரபலமா?

  • IndiaGlitz, [Thursday,October 13 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் சென்சார் சென்று ’யூ’ சான்றிதழ் பெற்றுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

’Who Am I’ என்று தொடங்கும் இந்த பாடலை எழுதி பாடியது பிரபல பாடகர் அறிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ளஇந்த பாடல் நிச்சயம் ஏற்கனவே வெளியான இரண்டு பாடல்கள் போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவில் ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் சிவகார்த்திகேயனின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என கருதப்படுகிறது.

More News

வெங்கட்பிரபு-நாகசைதன்யா படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை: வில்லன் யார் தெரியுமா?

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் 'NC22' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அமைதிக்கு முன் ஒரு புயல்: அஜித்தை வேற லெவலில் வர்ணித்த விக்னேஷ் சிவன்!

அஜித்தின் புகைப்படத்தை தனது டுவிட்டரில் பதிவு செய்த இயக்குனர் விக்னேஷ் சிவன் 'அமைதிக்கு முன் ஒரு புயல்' என வர்ணித்துள்ளார். 

இரட்டை குழந்தைகள் விவகாரம்: விக்கி- நயனிடம் விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு! 

விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் இரட்டை குழந்தைகள் குறித்து விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உன் கால்ல விழுந்து உன்னை அம்மான்னு சொல்லட்டா.. முற்றும் ஜிபி முத்து - தனலட்சுமி விவகாரம்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ஜாலியாக காமெடி பண்ணுவார் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் மூன்றாவது நாளே அவர் கதறி அழுக

'இந்து' பிரச்சனையால் இன்னும் ஒரு 100 கோடி கிடைக்கலாம்: ரூ.400 கோடி வசூல் குறித்து  PS1 நடிகர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஏற்கனவே ரூ400 கோடி வசூலை தாண்டிவிட்ட நிலையில் இந்து என்ற பிரச்சனை எழுப்பப்பட்டால் இன்னும் 100 கோடி வசூல் செய்யும்