சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' தயாரிப்பாளரின் அடுத்த படம்.. 40வது படத்தில் அடியெடுத்து வைக்கும் ஹீரோ..!

  • IndiaGlitz, [Saturday,May 18 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ என்ற வெற்றி திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தின் மூலம் பிரபல ஹீரோ தனது 40 வது படத்தில் அடி எடுத்து வைக்க உள்ளார்.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.35 கோடி செலவில் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ரூ.90 கோடி வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் முதல் படம் வெற்றியை அடுத்து தற்போது ‘மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அடுத்த பட அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எங்கள் நிறுவனத்தின் இரண்டாவது படத்தின் அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் எங்கள் சாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாகும் அடுத்த படத்தில் நடிகர் சித்தார்த் நடிக்க உள்ளார் என்றும் இது அவரது 40வது படம் என்பதால் ’சித்தார்த் 40’ என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தின் கதை உலகெங்கும் உள்ள இதயங்கள் எதிரொலிக்கும் வகையில் இருக்கும் என்றும் இந்த படத்தின் விவரங்களை மிக விரைவில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் மற்ற தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

விஜய்சேதுபதியின் 'ஏஸ்'ஃபர்ஸ்ட் லுக்கில் உள்ள சுவாரஸ்யமான  விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  'ஏஸ்' ( ACE)' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து அஜித்.. மக்கள் செல்வனுக்கு அடித்த ஜாக்பாட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் ஆகியோர்களின் படங்களில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி ,அடுத்ததாக அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக

'கோட்' படத்தின் முக்கிய பணி முடிந்தது.. வெங்கட்பிரபு கொடுத்த மாஸ் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக செய்தி வெளியான நிலையில் இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக VFX

பவித்ரா ஜெயராமனுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சி தகவல்..!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல கன்னட சீரியல் நடிகை பவித்ரா ஜெயராமன் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில் அவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஒருவரும்

நடிகர் சிவகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல்.. ராதிகா சரத்குமார் வெளியிட்ட வீடியோ..!

பழம்பெரும் நடிகர் சிவகுமார் செய்த நெகிழ்ச்சியான செயல் குறித்த வீடியோவை நடிகை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.