சிவகார்த்திகேயன் படத்தின் சிறப்பான தரமான அப்டேட்!

  • IndiaGlitz, [Saturday,July 27 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகிய நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் 4 படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம், 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ஒரு படம், பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் பிஎஸ் மித்திரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் 'ஹீரோ' என்று வைக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று மாலை இந்த படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக இயக்குனர் மித்ரன் அறிவித்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் டைட்டில் டிசைன் மற்றும் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என்றும், அப்டேட் கேட்கும் நல்ல உள்ளங்களுக்கு இன்று மாலை 5 மணிக்கு சிறப்பான தரமான அப்டேட் இருப்பதாகவும் பிஎஸ் மித்ரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மாலை 5 மணியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்

More News

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர்: பார்வையாளர்கள் நிம்மதி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நமக்கு  கிடைத்துள்ளது

முதல்முறையாக வறுத்தெடுத்த கமல்ஹாசன்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் இடுப்பு பிரச்சனை உட்பட பல பிரச்சினைகள் தோன்றி இருக்கும் நிலையில் அந்தப் பிரச்சினைகளை கமல்ஹாசன் இன்று தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைரலாகி வரும் விஜய் பட நடிகையின் பிகினி ஸ்டில்

கோலிவுட்டில் 'கேடி' என்ற படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் விஜய் நடித்த 'நண்பன்' படத்தில் நாயகியாக நடித்தவர் இலியானா. இவர் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

டிக்டாக்கில் புகழ் பெற்ற 9 வயது சிறுமி மர்ம மரணம்!

கேரளாவில் டிக்டாக் வீடியோவால் புகழ் பெற்ற ஆருணி என்ற 9 வயது சிறுமி மர்ம நோயால் மரணம் அடைந்தார். இவரது மரணம் அவரது குடும்பத்தினர்களையும் டிக்டாக் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

தமிழ்ப்பட நாயகி கடத்தப்பட்டாரா? நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

தமிழ் படம் ஒன்றில் நாயகியாக நடித்த ஒருவர் கடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது