காமன்மேனாக இருந்தா பத்தாது, ஹீரோ வேணும்: ஹீரோ டீசர்

  • IndiaGlitz, [Thursday,October 24 2019]

சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை முதல்முறை பார்த்தவுடனே ‘இரும்புத்திரை’ போல் ஏதோ வித்தியாசமாக இயக்குனர் சொல்ல வருகிறார் என்பது புரிய வருகிறது

’ஏ ஃபார் ஆப்பிள் என்று சொன்னால் அவன் என் புரடொக்ட், ஏ ஃபார் ஏரோபிளேன்னு சொன்னா அவர் என் காம்பிடேட்டர் என்ற முதல் வசனமே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கின்றது

திறமையாவது மண்ணாங்கட்டியாவது இங்க காசு இல்லைன்னா வேலைக்காவாது என்ற வசனம் எந்த அளவுக்கு நமது சமுதாயத்தில் காசுக்கு முக்கியத்துவமும் திறமைக்கு முக்கியத்துவம் இன்மையும் இருப்பது வெட்டவெளிச்சமாகிறது

நீட்ட வேண்டியதை நீட்டினால் சீட்டெல்லாம் தானா வரும் என்ற வசனம் ஊழல், லஞ்சம் எந்த அளவுக்கு கல்வித்துறையில் தலைவிரித்தாடுகிறது என்பது தெரிகிறது

நம்ம கல்வி முறையில எல்லோரும் படிக்க முடியும், ஆனால் எல்லாரும் சாதிக்க முடியாது. இந்த சிஸ்டத்தை மாற்றுவதற்கு காமன்மேன் பத்தாது, ஹீரோ வேணும் என்ற அர்ஜூனின் வசனத்தை அடுத்து சிவகார்த்திகேயன் எண்ட்ரி ஆகிறார். அவர் இந்த படத்தில் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது

யுவன்ஷங்கர் ராஜாவின் அபாரமான பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் என டிரைலரில் இருந்தே தெரியவருகிறது. மொத்தத்தில் இந்த முறை இயக்குனர் கல்வி விவகாரத்தை டெக்னாலஜி துணையுடன் கையில் எடுத்திருக்கின்றார். சுவாரஸ்யம் மற்றும் சமூக கருத்து ஆகிய இரண்டும் கலந்துள்ள படம் என்பதால் மீண்டும் அவருக்கு ஒரு வெற்றிப்படமாக இந்த படம் இருக்கும் என கருதப்படுகிறது
 

More News

700 வருடங்களுக்கு முந்தைய கல்லால் செய்யப்பட்ட வாள் கண்டுபிடிப்பு

தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போஸ்னியா என்ற நாட்டில் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லால் செய்யப்பட்ட வாள் ஒன்றை நதிக்கரையோரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது 

மார்பகத்தில் ரகசிய கேமிரா வைத்து இளம்பெண் கண்டுபிடித்த விஷயம்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாலையில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை பார்ப்பவரகள் அந்த பெண்ணின் எந்த உறுப்பை முதலில் பார்க்கின்றனர் என்ற ஒரு சர்வே எடுக்கப்பட்ட போது

குடும்பமே மரணம் அடைய காரணமான டிரைவரை மன்னித்த கருணையுள்ள பெண்!

தென்மேற்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்த 43 வயது பெண் ஒருவரின் கணவர், மகள் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை ஆகிய மூன்று உயிர்கள் மரணம் அடைய காரணமாக இருந்த டிரைவர்

உலகின் 50 செக்ஸி நகரங்கள் பட்டியலில் உள்ள ஒரே இந்திய நகரம்!

தனியார் நிறுவனம் ஒன்று உலகில் உள்ள 50 செக்ஸியான நகரங்கள் குறித்த சர்வே ஒன்றை எடுத்து அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர் 

திரைப்படம் பார்க்கும் ஆர்வத்தில் இரண்டு வயது குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்கள் 

பிரிட்டன் நாட்டில் ஒரு தம்பதியர் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தபோது 2 வயது குழந்தை பரிதாபமாக மரணம் அடைந்ததை கவனிக்காமல்