சிவகார்த்திகேயனின் 'டான்' ரிலீஸ் எப்போது? ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Sunday,September 12 2021]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’டாக்டர்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என பட தயாரிப்பாளர் சமீபத்தில் உறுதி செய்தார் என்பதும் தெரிந்ததே. இந்த படம் அக்டோபர் முதல் வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ’அயலான்’ மற்றும் ’டான்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’அயலான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சிபி சக்கரவர்த்தி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும் ’டான்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 10 முதல் 15 நாட்கள் வரை மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அதுவும் இம்மாதத்திற்குள் முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இந்த திரைப்படம் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிவகார்த்திகேயன் மற்றும் லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பாலசரவணன் காளி வெங்கட், ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ஒண்ட் அண்ட் ஒன்லி தலைவரை சந்தித்து ஆசி பெற்றேன்: அதிதி ஷங்கர்

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், சமீபத்தில் ஹீரோயின் ஆகியுள்ள நிலையில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது 

கலைப்புலி எஸ். தாணுவின் அடுத்த பட பர்ஸ்ட்லுக் ரிலீஸ்!

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைபுலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று பிரபல இயக்குனர் வெற்றிமாறன்

நான் ஒன்றுக்கும் உதவாதவனா? தென்ஆப்பிரிக்க வீரர் கடும் ஆதங்கம்!

டி20 உலகக்கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் அதன் நட்சத்திர வீரர்கள் டுபிளெசிஸ்

கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த வெளியீட்டில் கவுதம் மேனன்: ஃபர்ஸ்ட்லுக்

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணியில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்த அவலம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து அருகே உள்ள 7 ஸ்டார் அசைவ உணவகம்