சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே. மேலும் சமீபத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பார்வையாளர்களின் கூட்டம் அதிகம் இல்லை என்பதால் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னரும் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் ஆனால் அதே நேரத்தில் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்றும், முதலில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன பின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னரே ஓடிடியில் இந்த படம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ’டாக்டர் ’படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சமந்தாவுடன் முதல்முறையாக இணையும் தமன்னா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சமந்தா மற்றும் தமன்னா ஆகிய இருவரும் ஒரு படத்தில் கூட இன்னும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால்.... சித்ரா குறித்து சக நடிகையின் உருக்கமான பதிவு!

சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை உலகத்தையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்ட

'தளபதி 65' படத்தின் டைட்டில் இதுவா? வைரலாகும் போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 'தளபதி 65' படத்தை இயக்க இருப்பது யார்

கின்னஸ் சாதனையில் 10 நொடிகளில் தூள் தூளாக்கப்பட்ட 144 மாடிக்கொண்ட கட்டிடம்…

அபுதாபியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வணிக நிறுவனமாக இயங்கி வந்த கட்டிடம் ஒன்று வெறுமனே 10 நொடிகளில் தகர்க்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.

ஒரு கிட்னியுடன் உலகத் தரவரிசைப் பட்டியலில் உச்சத்தைத் தொட்ட இந்திய வீராங்கனை!!!  வைரல் டிவிட்!!!

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முன்னாள் தடகள வீராங்கனையான அஞ்சு பாபி ஜார்ஜ் ஒரு அதிர்ச்சி டிவிட்டை வெளியிட்டு உள்ளார்.