சூர்யாவை அடுத்து பெப்சி தொழிலாளர்களுக்கு உதவிய பிரபல நடிகர்

கொரோனா காரணமாக வேலையின்றி, வருமானம் இன்றி இருக்கும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணிவின் கோரிக்கையை ஏற்று முதல் நபராக சூர்யா குடும்பத்தினர் ரூபாய் 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள் எனப்தை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அடுத்தடுத்து பெப்ஸி தொழிலாளர்களுக்காக திரையுலக பிரபலங்கள் உதவிக்கரம் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தளபதி விஜய்யின் ரசிகர்களும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக 10 மூட்டை அரிசி கொடுத்து உதவி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யாவை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பங்காக பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கியுள்ளார். பெப்சி தொழிலாளர்களின் பசியை போக்க 10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. வெகுவிரைவில் பெப்சி தொழிலாளர்களுக்காக மாஸ் நடிகர்களின் நன்கொடை குறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.