சிவகார்த்திகேயன் பின்பற்றும் நான்கு ரூல்ஸ்கள்

  • IndiaGlitz, [Saturday,October 15 2016]

பத்து படங்கள் மட்டுமே நடித்த ஒருவர் மாஸ் நடிகர் பட்டியலில் இணைந்திருக்கும் அதிசயம் வேறு எங்குமே நடந்திருக்க முடியாது. ஆனால் இந்த அதிசயத்தை கோலிவுட்டில் நிகழ்த்தி காட்டியவர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் மிகக்குறுகிய காலத்தில் மாஸ் நடிகர் இடத்தை பிடித்ததற்கு அவர் பின்பற்றி வரும் 4 ரூல்ஸ்கள்தான் காரணம் என்று கூறப்படுகிறது. அவை 1. ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது. 2. பணத்திற்காக மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. 3. புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்ப்பது. 4. சிவகார்த்திகேயன் படங்களை குழந்தைகள் அதிகம் பார்த்து ரசிப்பதால் அதிக ரத்தம் சிந்தும் காட்சிகளை தவிர்ப்பது. மேற்கண்ட நான்கு ரூல்ஸ்களையும் அவர் இனிவரும் படங்களில் தொடர்ந்து பின்பற்றுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினிமுருகன், ரெமோ ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் 11-ல் தொடங்குகிறது.

More News

ஹீரோவாக நடிப்பது எப்போது? அனிருத் பதில்

கோலிவுட் திரையுலகில் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறும் சீசன் நடந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் கோலிவுட் நட்சத்திரங்கள்?

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய வரும் நவம்பர் 8ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

பாபிசிம்ஹா-கீர்த்திசுரேஷின் 'பாம்பு சட்டை' லேட்டஸ்ட் அப்டேட்

இயக்குனர் மற்றும் காமெடி நடிகரான மனோபாலா தயாரித்த முதல் படமான 'சதுரங்க வேட்டை' ஒரு நல்ல மெசேஜ் உடன் கூடிய வெற்றிப் படமாக அமைந்த நிலையில் அவர் தயாரித்த இரண்டாவது படமான 'பாம்புச்சட்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

விஷாலின் 'கத்திச்சண்டை' டீசர் விமர்சனம்

விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கியுள்ள 'கத்திச்சண்டை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை தெளிவாக்கிய ரஜினியின் அட்வைஸ்

சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' படத்தின் வசூல் சாதனை ஏற்படுத்திய பரபரப்பை விட நன்றி விழாவில் அவர் சிந்திய கண்ணீர் கோலிவுட் திரையுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.