முடிவுக்கு வந்தது சிவகார்த்திகேயனின் முதல் படம்

  • IndiaGlitz, [Tuesday,July 17 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கிய 'சீமராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது என்பதும் தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கும் இந்த படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளிவரவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' திரைப்படத்தின் படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் மிகக்குறுகிய இடைவெளியில் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றுடன் 'கனா' படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்றதை அடுத்து இன்று இரவு இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'கனா' படத்திற்காக இரவுபகலாக பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர் என்ற முறையில் இந்த விழாவில் சிவகார்த்திகேயன் தனது நன்றியை தெரிவிக்கவுள்ளார்.

அருண்காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கனா' படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் அப்பா-மகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தர்ஷன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தாமஸ் இசையில், இளையராஜா கலையில் உருவாகும் இந்த படத்தை ஆண்டனி எல் ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
 

More News

சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர்களுக்கு அடி-உதை: நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 21 பேர் கொண்ட ஒரு கும்பல் சுமார் 7 மாத காலமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

டுவிட்டர் டிரெண்டில் இடம்பெற்ற 'கோபேக் ஸ்டாலின்': அதிர்ச்சியில் திமுக

பொதுவாக நெட்டிசன்களின் இணையவழி போர் பாஜக மீதுதான் பெரும்பாலும் இருக்கும்

தூக்கில் போடுங்கள்: 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 கயவர்கள் குறித்து பிரபல நடிகை

சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் செக்யூரிட்டிகள் உள்பட மொத்தம் 22 பேர் 12 வயது வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமியை சுமார் 7 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சென்னையில் ஸ்ரீரெட்டி: கோலிவுட் பிரபல நடிகைகள் டார்கெட்டா?

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் ஸ்ரீலீக்ஸ் என்ற புயல் ஓய்ந்தாலும் தற்போது அந்த புயல் கோலிவுட்டை தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் மையம் கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் வின்னர்

கடந்த ஞாயிறு அன்று சென்னையில் சூப்பர் சிங்கர் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மக்கள் இசைக் கலைஞரான செந்தில் கணேஷ் வெற்றி பெற்றார்.