'அயலான்' ரிலீஸ் மட்டுமல்ல, இன்னொன்றும்: ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் டபுள் ட்ரீட்..

  • IndiaGlitz, [Sunday,November 26 2023]

சிவகார்த்திகேயன் நடித்த ’அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தினத்தில் அவர் நடித்து வரும் 'எஸ்கே 21’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’அயலான்’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே தினத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’, தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’, சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 4’, விஜய் சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் பொங்கல் தினத்தில் சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு ’அயலான்’ என்ற படத்தை விருந்தாக தர இருக்கும் நிலையில் அவர் தற்போது நடித்து வரும் ’எஸ்.கே 21’ படத்தின் டைட்டில் உடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு பொங்கல் தினத்தில் டபுள் விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருவதாகவும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

4 பெண் இயக்குனர்களுடன் இணையும் பா ரஞ்சித்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

4 பெண் இயக்குனர்களுடன் இயக்குனர் பா. ரஞ்சித் இணையும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது

பிக்பாஸ் போட்டியாளர்களின் முகத்திரையை கிழித்த விஜய் வர்மா.. இனி ஆட்டம் சூடு பிடிக்குமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் நிலையில் திடீர் திருப்பமாக எவிக்சன் ஆன எக்ஸ் எக்ஸ் போட்டியாளர்கள் மீண்டும் ரீஎண்ட்ரி தருவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் காதல் – தி கோர் ஜோதிகாவை பாராட்டிய பிரபல நடிகை..!

பிரபல மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்த   “காதல் – தி கோர்” என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜோதிகாவின்

வனிதா தாக்கப்பட்ட விவகாரம்.. தாமாக முன்வந்து விசாரிக்கும் காவல்துறை..

நடிகை வனிதா நேற்று நள்ளிரவு மர்ம நபர்களால் தாக்கப்பட்டார் என்று தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்த நிலையில் தன்னை தாக்கியவர் பிரதீப் ஆதரவாளராக இருக்கலாம் என்று கூறியிருந்தார்.

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மானநஷ்ட வழக்கு.. அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

 த்ரிஷா உள்பட 3 பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.