சிவகார்த்திகேயனின் 'டான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Wednesday,November 24 2021]

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘டான்’ திரைப்படம் வரும் கிறிஸ்மஸ் நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் அஜித்தின் ’வலிமை’ வெளியாக உள்ளது என்பதும் அதனை அடுத்து இரண்டு வார இடைவெளியில் விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தலைவாழை இலை, அம்மன் கெட்டப்: தமன்னாவின் அட்டகாசமான புகைப்படம் வைரல்!

தலைவாழை இலையில் அம்மன் வேடமிட்டு நடிகை தமன்னா உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி

விவாகரத்து வதந்திக்கு அன்பான வரிகளால் முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது சமூகவலைத்தள கணக்குகளில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் என்றிருந்த பெயரை

கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனையின் லேட்டஸ்ட் அறிக்கை!

உலக நாயகன் கமல்ஹாசன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம்

சமாதானம் பேச வந்த சிபி: அக்சராவின் ரியாக்சன் என்ன?

இன்று வெளியான இரண்டு புரமோ வீடியோவிலும் அக்ஷரா மற்றும் சிபி இடையே மோதல் போக்கு நடந்த நிலையில் தற்போது வந்துள்ள மூன்றாவது புரமோவில் அக்சராவிடம் சிபி சமாதானம் பேச வந்த காட்சிகள் அடங்கியுள்ளன

மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டி கொண்ட சேரன் - செல்வராகவன்!

இயக்குனர் சேரன் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பாராட்டிக் கொண்டும் நன்றி தெரிவித்துக் கொண்டும் இருந்தது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது