ராகவா லாரன்ஸ், விஷாலை அடுத்து தீபாவளி ரிலீஸில் இணையும் சிவகார்த்திகேயன்?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் ஒருசில திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன என்பதும் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ’லட்சுமி பாம்’ என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் விஷாலின் ’சக்ரா’ படமும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் மற்றும் விஷாலை அடுத்து தீபாவளி ரிலீசில் சிவகார்த்திகேயன் படம் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி ’டாக்டர்’ திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தையும் ஓடிடியில் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ரகுல்பிரீத்தி சிங், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பதும் ரவிக்குமார் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

சிகரம்‌ தொட்ட சாதனையாளர், சாதிக்கத்‌ துடிக்கும்‌ இளமை‌யின் 'எவனென்று நினைத்தாய்': ராஜ்கமல் நிறுவனம் அறிக்கை!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'எவனென்று நினைத்தாய்' குறித்த படத்தின் அறிவிப்பு சற்றுமுன் வெளியானது என்பதை பார்த்தோம்.

லோகேஷ் கனகராஜ்-கமல்ஹாசன் படத்தின் டைட்டிலுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு:

மாநகரம், கைதி ஆகிய படங்களை அடுத்து தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' என்ற திரைப்படத்தை இயக்கி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

திருமணத்தை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண்… 7 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை!!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் திருமணத்தை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், 7 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று மீண்டும்

பாம்பை முகக்கவசமாக அணிந்து பேருந்தில் பயணித்த நபர்… கிலி பிடிக்கும் சம்பவம்!!!

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்தே மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற வார்த்தைகளை நாம் அதிகம் புழங்க ஆரம்பித்து விட்டோம்.

700 கி.மீ தூரம் பயணம்செய்து நீட் எழுத வந்த மாணவனுக்கு அனுமதி இல்ல… காரணத்தை கேட்டா நீங்களே டென்ஷன் ஆவீங்க…

கொரோனா தாக்கத்தால் மனிதனது இயல்பு வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. இந்நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது.