சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் கதை என்ன? வெளிவராத தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 25 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ஹீரோ திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘டாக்டர்’ என்ற படத்தை கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கப்போவதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரங்களில் நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தில் மருத்துவத்துறை குறித்த ஒரு முக்கிய பிரச்சனை மிக ஆழமாக அலசப்படுவதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது

ஏற்கனவே மருத்துவத்துறையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து பல திரைப் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படம் இதுவரை யாரும் தொடாத ஒரு பிரச்சனையை அலசி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இருப்பதாகவும் இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது

More News

பக்கா கிராமத்து பெண்: இணையத்தில் வைரலாகும் 'தர்பார்' மீனா புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு தற்போது

லக்‌ஷ்மன் சுருதி ராமன் தற்கொலையா? அதிர்ச்சி தகவல்

பிரபல இசை நிறுவனமான லக்‌ஷ்மன் சுருதியின் இயக்குனர் ராமன் அவர்கள் நேற்று இரவு தனது வீட்டில் காலமானார் என்ற செய்தி இசை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

'லக்‌ஷ்மன் ஸ்ருதி' ராமன் திடீர் மறைவு: திரையுலகினர் இரங்கல்

பிரபல மேடைக்கச்சேரி இசையமைப்பாளர் (லக்‌ஷ்மன் சுருதி) லக்‌ஷ்மன் அவர்களின் சகோதரர் ராமன் அவர்கள் நேற்றிரவு 9 மணி அளவில் காலமானார்.

குடியுரிமை சட்டம் குறித்த பரபரப்பான கருத்தை தெரிவித்த மீராமீதுன்!

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்தச் சட்டத்தை பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் திரை உலகில் உள்ள பிரபலங்கள்

ஒரே துணியில் தூக்கில் தொங்கிய அண்ணன் - தம்பி: சென்னையில் பரபரப்பு

சென்னையில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஒரே துணியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.