சினிமாவுக்கு வரும் சிவகார்த்திகேயன் மகள்

  • IndiaGlitz, [Wednesday,August 22 2018]

சினிமாத்துறையில் உள்ள பிரபலங்கள் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்றே. சிவாஜிகணேசனின் வாரிசுகள் முதல் விஜய்சேதுபதியின் வாரிசு வரை சினிமாவில் அறிமுகமாகி உள்ளனர்

இந்த நிலையில் கோலிவுட் திரையுலகின் மாஸ் ஸ்டார்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவும் தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஆம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்காமராஜ் இயக்கி வரும் 'கனா' என்ற படத்தில் ஆராதனா ஒரு பாடலை பாடியதன் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடல் இடம்பெறுகிறது. இந்த பாடலைத்தான் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளனனர். மேலும் இந்த பாடலை ஆராதனாவுடன் சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கம் விஜயலட்சுமி ஆகியோர்களும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்கள் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து திடீரென விலகிய ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர்

இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இயக்குனர் டேனி போய்லே ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது

மகத்-யாஷிகா காதல் ஸ்கிரிப்டா? உண்மையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மகத், யாஷிகா ஒருவரை ஒருவர் காதலிப்பதாக நேற்று அறிவித்தனர். தனக்காக வெளியே ஒரு பெண் காத்திருக்கின்றார் என்று தெரிந்தும்

இந்த வாரம் மகத் வெளியேறுவது உறுதியா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார எவிக்சன் பட்டியலில் மகத், பாலாஜி, செண்ட்ராயன், மும்தாஜ் ஆகியோர் உள்ளனர்.

விக்ராந்த் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய விக்ராந்த் தற்போது 'வெண்ணிலா கபடிக்குழு' மற்றும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்.

ஒரே நாளில் 3 சமந்தா படங்கள் ரிலீஸ்: தென்னிந்தியாவின் முதல் சாதனை

நடிகை சமந்தா நடித்த மூன்று திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவிருப்பதால் இது தென்னிந்தியாவின் முதல் சாதனையாக கருதப்படுகிறது.