நிறுத்தும்மா.. அப்படி சொல்லாதே.. சாய்பல்லவியால் கடுப்பான சிவகார்த்திகேயன்..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

நேற்று நடந்த ‘அமரன்’ இசை வெளியீட்டு விழாவில் ‘நடிகை சாய் பல்லவி தன்னை அண்ணா என்று அழைத்ததாகவும், அதனால் தான் கடுப்பானதாகவும், நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்தியாவுக்காக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் முகுந்த் என்பவரின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் தீபாவளி என்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகும் விழா நடந்த நிலையில், இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது சாய் பல்லவி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவத்தை தெரிவித்தார். ’பொதுவாக, டீச்சர் என்றாலே மாணவர்கள் தெறித்து ஓடுவார்கள்; ஆனால் முதல் முறையாக மலர் டீச்சருக்கு இவ்வளவு மரியாதையா என்று ஆச்சரியமடைந்தேன்.

‘பிரேமம்’ படம் பார்த்த பிறகு, நானும் மலர் டீச்சர் ரசிகர் ஆனேன். அவரது மொபைல் எண்ணை வாங்கி, அவரிடம் பேசினேன். சூப்பராக நடித்துள்ளீர்கள். அறிமுக காட்சியும் கிளைமாக்ஸ் காட்சியும் சூப்பர், என்று கூறினேன். அதற்கு சாய் பல்லவி மிகவும் நன்றி அண்ணா என்று கூறிய போது எனக்கு கடுப்பாகி விட்டது.

நிறுத்தமா, என்று கூறிய நான், நான் மலர் டீச்சரிடம் பேசுவது போல் பேசுகிறேன். நீங்கள் ஏன் சாய் பல்லவி மாதிரி பேசுகிறீர்கள்? என்னை 'அண்ணா' என்று மட்டும் அழைக்காதே. நாம் என்றாவது ஒருநாள் இணைந்து ஒரு படம் பண்ணுவோம், என்றேன். அது தற்போது நிறைவேறியுள்ளது என்று கூறினார்.

மேலும், சாய் பல்லவி தன்னை ஒரு சிறந்த நடிகையாக உயர்த்திக் கொண்டு வருகிறார் என்றும், நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறார் என்றும், அவர் ஒரு பிராண்ட் என்றும் தெரிவித்தார்.

More News

மும்பையில் சூர்யாவை சர்ப்ரைஸ் ஆக சந்தித்த பிரபல நடிகை..  வைரல் வீடியோ..!

சூர்யாவுடன் ஒரே ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்த பிரபல நடிகை, தற்செயலாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மும்பை விமான நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த சூரியாவை சந்தித்தார்.

தீபாவளி விருந்து: 'விடாமுயற்சி' வருகிறதோ இல்லையோ, இந்த 2 படங்களும் உறுதி..!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தில் மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும். ஆனால், இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமலஹாசன்,

சிறைக்கைதியாக ஆர்ஜே பாலாஜி.. 'சூர்யா 45' படப்பிடிப்பு எப்போது?

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க இருக்கிறார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜி நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

'கோட்' படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்வுடன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு

பிக்பாஸ் செளந்தர்யாவுக்கு இப்படி ஒரு காதலா? பிரேக் அப் ஆனது ஏன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் ஒரு பிரச்சனை காரணமாக பிரேக் அப் செய்து விட்டதாகவும், சக போட்டியாளர்களிடம்