சூர்யா படத்தில் சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Friday,November 19 2021]

சூர்யாவின் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்துள்ள அடுத்த திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும், அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய்யின் ’பீஸ்ட்’ படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திலும் அவர் ஒரு பாடல் எழுதி இருப்பதாக தகவல் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மன்னிப்பு கேட்டால் ஒரு லட்சம் மணியார்டர்: சூர்யாவுக்கு பாமக பிரமுகர் அறிவிப்பு!

'ஜெய்பீம்' திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டால் சூர்யாவுக்கு ஒரு லட்ச ரூபாய் மணியார்டர் அனுப்பப்படும்

வர்றேன், திரும்ப வர்றேன்: சிம்புவின் 'மாநாடு' டிரைலர்

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

செல்லக்கிளியுடன் தல தோனி… இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திரசிங் தோனி, பண்ணை விவசாயம் மற்றும் இயற்கை மீது அதிக

நடிகர் கமல்ஹாசன் கூறிய ஒரு வார்த்தை, என் வாழ்வை மாற்றியது… பிரபல நடிகை புகழாரம்!

பாலிவுட் சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்துவரும் பிரபல நடிகை ராணி

உள்ளே வந்தார் அபிஷேக்: போட்டியாளர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நபராக வீட்டை விட்டு வெளியே போன அபிஷேக் மீண்டும் உள்ளே வரப் போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.