சூர்யா படத்தில் சிவகார்த்திகேயன்: ரசிகர்கள் உற்சாகம்!

  • IndiaGlitz, [Friday,November 19 2021]

சூர்யாவின் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து உள்ளதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடித்துள்ள அடுத்த திரைப்படம் ’எதற்கும் துணிந்தவன்’. பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரசியமான தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும், அதேபோல் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே விஜய்யின் ’பீஸ்ட்’ படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்திலும் அவர் ஒரு பாடல் எழுதி இருப்பதாக தகவல் வெளிவந்து ரசிகர்களை மகிழ்ச்சி உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.