close
Choose your channels

கிஷோர் குடும்பத்திற்கு உதவிய சரத்குமார்-சிவகார்த்திகேயன்

Wednesday, March 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று முன் தினம் 63வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் 'விசாரணை' படத்திற்காக சிறந்த எடிட்டர் விருது மறைந்த கிஷோர் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தற்போது கிஷோரின் குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் கஷ்டத்தில் இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து கோலிவுட் திரையுலகினர் தாங்களாகவே முன்வந்து அவருடைய குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர்.


பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.2 லட்சமும், முன்னாள் நடிகர் சங்கத்தலைவர் ரூ.1 லட்சமும் உதவி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராகவா லாரன்ஸ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர்களும் கிஷோரின் குடும்பத்திற்கு பல உதவிகள் செய்துள்ளனர். இந்த தகவலை கிஷோரின் தந்தை தியாகராஜன் பிரபல பத்திரிகை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஒருபக்கம் நலிந்த கலைஞர்களுக்காக நடிகர் சங்கத்தின் மூலம் விஷால் உதவி செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தனிப்பட்ட முறையில் நடிகர்கள் உதவி செய்து வருவது கோலிவுட் திரையுலகம் ஆரோக்கியமான பாதையில் செல்வதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment