என் சந்தோஷ கண்ணீரே.. திருமண நாளில் சிவகார்த்திகேயனின் க்யூட் பதிவு..!

  • IndiaGlitz, [Sunday,August 27 2023]

13-வது திருமண நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ’என் சந்தோச கண்ணீரே.. என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆனதை அடுத்து 13-வது திருமண நாளை சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிகள் கொண்டாடி வருகின்றனர். அவர்களுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இதுகுறித்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த சிவகார்த்திகேயன், ‘என் சந்தோஷ கண்ணீரே.. என்று பதிவு செய்து மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தின் பின்னணியில் அவரது அப்பா புகைப்படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’எஸ்கே 22’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீரில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.