முன்னுதாரணமான நடிகர் சிவகார்த்திகேயன்… சிங்கத்தை தத்தெடுத்ததாகத் தகவல்!

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இது மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று அப்பூங்காவின் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை காட்டு விலங்குகள், பறவைகள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகிறது என்பதற்காக விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டமும் இங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் 3 வயது சிங்கமான ஷேரு எனும் சிங்கத்தை தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய அபூங்காவின் அதிகாரிகள் ‘நடிகர் சிவகார்த்திகேயன் 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இந்தத் தத்தெடுப்பு பூங்கா நிர்வாகத்தின் அதிகாரிகளால் மிகவும் வரவேற்கப்படுகிறது. ஷேரு சிங்கத்தின் அன்றாட பராமரிப்பிற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு யானை, புலி போன்ற விலங்குகளைத் தத்தெடுத்த நிலையில் தற்போது சிங்கத்தை 6 மாதக் காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதன் மூலம் அந்த விலங்கின் பாராமரிப்பு செலவிற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருடைய செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வண்டலூர் பூங்காவில் எந்த ஒரு தனிநபரும் விலங்குகளை தத்தெடுக்க முடியும் என்பதும் விலங்குகளை தத்தெடுக்கும் நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவது என்பதும், மேலும் இலவசமாக பூங்காவை சுற்றிப்பார்க்கலாம் என்பதும் போன்ற பல தகவல்கள் இதனால் இணையத்தில் பரவிவருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ மற்றும் ‘அயலான்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொடுக்காளி’ திரைப்படத்திலும் அதேபோல விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ‘எஸ்.கே.17’ திரைப்படத்திலும் அவர் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

போதை பொருள் வைத்திருந்ததாக பிரபல தயாரிப்பாளர் கைது.. பிரபல நடிகைக்கு தொடர்பா?

போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயம் ரவி வீட்டில் என்ன விசேஷம்? ஒட்டுமொத்த குடும்பமே கூடியிருக்குது..!

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13 வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது ஒட்டுமொத்த குடும்பமே கூடி இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

சேர வேண்டியவங்களோட சேர போற.. சிம்பு வெளியிட்ட 'ஸ்வீட் காரம் காப்பி' டிரைலர்..!

 ஜூலை 6ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் 'ஸ்வீட் காரம் காபி' என்ற வெப்தொடரின் டிரைலரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரைலர் வீடியோ தற்போது

விதார்த் நடிக்கும் ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லர் படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

Trending entertainment & White horse studios K. சசிகுமார்   தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோர் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம்

உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவாங்க? ஏடாகூடா கேள்விக்கு பிக்பாஸ் சனம் ஷெட்டியின் தரமான பதிலடி..!

 நடிகை சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவார்கள் என்ற கேள்விக்கு அவர்  தரமான பதிலடி கொடுத்துள்ளார்.