close
Choose your channels

முன்னுதாரணமான நடிகர் சிவகார்த்திகேயன்… சிங்கத்தை தத்தெடுத்ததாகத் தகவல்!

Friday, June 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் வண்டலூர் பூங்காவில் வளர்க்கப்பட்டு வரும் சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இது மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் என்று அப்பூங்காவின் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

சென்னை அடுத்த வண்டலூர் பகுதியில் இயங்கிவரும் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை காட்டு விலங்குகள், பறவைகள் போன்றவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு லட்சக்கணக்கில் செலவு ஆகிறது என்பதற்காக விலங்குகளைத் தத்தெடுக்கும் திட்டமும் இங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் 3 வயது சிங்கமான ஷேரு எனும் சிங்கத்தை தத்தெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து பேசிய அபூங்காவின் அதிகாரிகள் ‘நடிகர் சிவகார்த்திகேயன் 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இந்தத் தத்தெடுப்பு பூங்கா நிர்வாகத்தின் அதிகாரிகளால் மிகவும் வரவேற்கப்படுகிறது. ஷேரு சிங்கத்தின் அன்றாட பராமரிப்பிற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு யானை, புலி போன்ற விலங்குகளைத் தத்தெடுத்த நிலையில் தற்போது சிங்கத்தை 6 மாதக் காலத்திற்கு தத்தெடுத்துள்ளார். இதன் மூலம் அந்த விலங்கின் பாராமரிப்பு செலவிற்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருடைய செயலுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் வண்டலூர் பூங்காவில் எந்த ஒரு தனிநபரும் விலங்குகளை தத்தெடுக்க முடியும் என்பதும் விலங்குகளை தத்தெடுக்கும் நபர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவது என்பதும், மேலும் இலவசமாக பூங்காவை சுற்றிப்பார்க்கலாம் என்பதும் போன்ற பல தகவல்கள் இதனால் இணையத்தில் பரவிவருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ மற்றும் ‘அயலான்’ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொடுக்காளி’ திரைப்படத்திலும் அதேபோல விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ‘எஸ்.கே.17’ திரைப்படத்திலும் அவர் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment