6 மாதங்களுக்கு சிவகார்த்திகேயன் தத்தெடுத்தது யாரை தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,October 10 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வரும் வருமானத்தின் ஒரு பகுதியை சமூக சேவைகளுக்கு செலவு செய்து வருகிறார் என ஏற்கனவே பல செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அவர் ஒரு புலியை ஆறு மாதங்களுக்கு தத்தெடுத்த செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் உள்ள ஒரு வெள்ளைப்புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். இனிவரும் ஆறு மாதங்களுக்கு அந்த புலிக்கு தேவையான உணவு உள்பட மற்ற செலவுகளுகாக அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை பூங்கா நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது 10 வயதாகும் அனு என்ற அந்த வெள்ளைப்புலி ஏற்கனவே சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்த விலங்கு என்பது குறிப்பிடத்தக்கது. அரியவகை விலங்கினமான வெள்ளைப்புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

வைரமுத்து விவகாரம்: சின்மயிக்கு பாராட்டு தெரிவித்த பிரபல நடிகர்

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து தற்போது தைரியமாக வெளியே சொல்ல ஆரம்பித்துவிட்டனர். நடிகைகள் சமீபகாலமாக கூறி வரும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

'வடசென்னை' திரைப்படத்திற்கு 'ஏ' சான்றிதழ்! ஏன் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் வரும் ஆயுதபூஜை திருநாளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

'சர்கார்' படத்தால் நனவாகிய நான்கு கனவுகள்: வரலட்சுமி

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் கிட்டத்தட்ட முடியும் நிலையில் உள்ளது

யுவன்ஷங்கருடன் மீண்டும் இணையும் வெற்றி பட இயக்குனர்

பிக்பாஸ் பிரபலங்களான ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் இயக்குனர் இளன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் உருவான 'பியார் பிரேமா காதல்

நயன்தாராவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் சமீபத்தில் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.