சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' ரிலீஸ் எப்போது? கசிந்த தகவல்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பகுதிக்கான காட்சிகளின் படப்பிடிப்பை கிட்டத்தட்ட முடித்து விட்டார் என்றும் அனேகமாக இம்மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜனவரி முதல் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் ரிலீசாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ ஜனவரியில் வெளியாவதால் அந்த படங்கள் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்தே பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் ‘மாவீரன்’ படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக மிக விரைவில் ‘மாவீரன்’ சிங்கிள் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘மாவீரன்’ திரைப்படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டது என்பதும் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடித்து வரும் இந்த படத்தில் மிஸ்கின் மற்றும் ’புஷ்பா’ சுனில் ஆகிய இருவரும் வேற லெவல் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி நடிகை சரிதா ஒரு அட்டகாசமான குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார். தேசிய விருது பெற்ற ‘மண்டேலா’ என்ற படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

'என்னால் இதுக்கு மேல் முடியாது.. 'தங்கலான்' நடிகை மாளவிகா மோகனனின் வீடியோ!

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'தங்கலான்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டு

என்ன வெங்காயத்த நம்ம பண்றது.. விக்ரமனிடம் ஆவேசமான போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி 58 நாள் முடிவடைந்த நிலையில் இன்னும் கிட்டத்தட்ட 40 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். 

திரையுலகில் நுழையும் ஷாருக்கான் மகன்.. முதல் படத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் திரையுலகில் நுழைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 

சென்னைக்கு மிக மிக பலத்த மழை.. ரெட் அலர்ட்  எச்சரிக்கை.. 2015 திரும்புகிறதா?

சென்னையில் மிக மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகர் சாயாஜி ஷிண்டே மீது திடுக்கிடும் புகார்.. காவல்துறையினர் விசாரணை

பிரபல குணச்சித்திர நடிகர் சாயாஜி ஷிண்டே மீது இயக்குனர் ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்ததை அடுத்து இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.