விஜயாவுக்கு ஆப்பு வைத்த மனோஜ்..! 'சிறகடிக்க ஆசை' 2 மணி நேர எபிசோடில் இவ்வளவு நடந்துருக்கா..

  • IndiaGlitz, [Sunday,June 30 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் தினந்தோறும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இரண்டு மணி நேரம் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த எபிசோடில் பல்வேறு திருப்பங்களுடன் மனோஜ் விஜயாவுக்கு ஆப்பு வைத்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

இன்றைய எபிசோடில் 4 லட்சம் ரூபாய்க்கு பொருள் வாங்கிய நபர் ஏமாற்றுக்காரர் என்பதும் அந்த நபர்களே விஜிலென்ஸ் அதிகாரிகள் போன்ற போலி நபர்களை அனுப்பி மனோஜிடம் இருந்து 4 லட்ச ரூபாயை பறித்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் ஸ்டேஷன் சென்றபோதுதான் இந்த உண்மை மனோஜ்க்கு தெரிய வந்த போது அதிர்ச்சி அடைந்து தன்னுடைய அம்மாவின் காலில் விழுந்து கதறி அழுகிறார்.

எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள், நான்கு லட்சம் ரூபாயை தயார் செய்யுங்கள் என்று அம்மா விஜயாவிடம் மனோஜ் கூற அப்போது விஜயா வேறு வழியின்றி மீனா கொடுத்த நகைகளை கொடுக்கிறார். அந்த நகைகளை அடகு வைத்து இப்போதைக்கு சமாளித்து கொள் என்று விஜயா கூற, மனோஜ் நகைக்கடைக்கு சென்ற போது நான்கு லட்சம் ரூபாய்க்கு இந்த நகைகளை அடகு வைக்க முடியாது, வேண்டுமானால் விற்று விடுங்கள் என்று சொல்ல, கொஞ்சம் கூட யோசிக்காமல் மனோஜ் அந்த நகைகளை விற்று விடுகிறார்.

இந்த நிலையில் மனோஜ் ஒரு லட்ச ரூபாய் ஒரே நாளில் சம்பாதித்து சம்பாதித்து விட்டதாக அனைவர் முன்னிலையிலும் ரோகிணி தம்பட்டம் அடிக்க, விஜயா தர்மசங்கடமாக மனோஜை பாராட்டவும் முடியாமல் திட்டவும் முடியாமல் திணறும் காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன
இதனை அடுத்து ஊரில் இருந்து பாட்டி தனது 80 வது பிறந்த நாளை கொண்டாட வருவதாக கூற பாட்டிக்கு ஏதாவது கிப்ட் தர வேண்டும் என்பதற்காக முத்து மற்றும் மீனா முடிவு செய்கின்றனர். ஆனால் பணம் இல்லையே என்ற நிலையில் மீனா அம்மாவிடம் கொடுத்த நகைகளை வாங்கி கொடுங்கள், பாட்டிக்கு நகை செய்ய வேண்டும் என்று முத்து அண்ணாமலையிடம் கூறுகிறார்.

இந்த விஷயம் தெரிந்த மனோஜ் தனது அம்மாவிடம் சென்று ’முத்து நகையை கேட்கிறான், ஏதாவது செய்யுங்கள் என்று சொல்ல, நான் என் நகைகளை தருகிறேன், அதை அடகு வைத்துவிட்டு, மீனா நகைகளை திருப்பிக் கொண்டு வா’ என்று விஜயா சொல்கிறார்.

அப்போது தான் மனோஜ், ‘நான் நகைகளை அடகு வைக்கவில்லை, விற்று விட்டேன் என்று சொல்லும் போது விஜயா அதிர்ச்சி அடைகிறார். இப்போது நான் என்ன செய்வேன் என்று விஜயா புலம்பி கொண்டிருப்பதோடு இன்றைய இரண்டு மணி நேரம் எபிசோடு முடிவடைகிறது,.

நாளைய எபிசோட் புரமோவில் விஜயா தங்களிடம் கொடுத்த நகை, கவரிங் என்று முத்து மற்றும் மீனாவுக்கு தெரிய வருகிறது. இதனால் அதிர்ச்சி அடையும் முத்து தனது அப்பா அண்ணாமலைக்கு போன் செய்கிறார்.

More News

பிரே பண்ணினேன் கடவுளுக்கு கேட்கல, கம்ப்ளைன்ட் பண்ணினேன் போலீஸ் கண்டுக்கல்ல.. 'மழை பிடிக்காத மனிதன்' டிரைலர்..!

விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவான 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல்

'தங்கலான்' ரிலீஸ் தேதி இதுதான்.. இனி அடுத்தடுத்து பல அப்டேட்டுகள்: சூப்பர் அறிவிப்பு..!

விக்ரம் நடிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'தங்கலான்' திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி சில மாதங்கள் ஆன நிலையில் சரியான ரிலீஸ் தேதிக்காக காத்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மீண்டும் இணையும் 'பார்க்கிங்' கூட்டணி.. ஹரிஷ் கல்யாண் அடுத்த பட அறிவிப்பு..!

ஹரிஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அதே தயாரிப்பு நிறுவனத்துடன்

இந்திரஜா - கார்த்திக் மட்டுமல்ல.. இன்னும் சில பிரபலங்கள்.. Mr and Mrs சின்னத்திரை' போட்டியாளர்கள் முழு லிஸ்ட்..!

விஜய் டிவியில் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை' நிகழ்ச்சி இன்று முதல் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சமீபத்தில் திருமணம் ஆன இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் அவரது

முயற்சி செய்யாதவனுக்கு தோல்வி கூட கிடைக்காது: சுந்தர் சி அடுத்த படத்தின் டிரைலர்..!

சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா மற்றும் ராஷிகண்ணா நடிப்பில் உருவான 'அரண்மனை 4' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சுந்தர் சி நடிப்பில் உருவான '