close
Choose your channels

மனோஜ்க்கு வேலை கிடைத்துவிட்டது.. மீனாவுக்கு தாலி கிடைத்துவிட்டது.. விறுவிறுப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை..!

Monday, February 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை’ என்ற தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த மனோஜ்க்கு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் வேலை கிடைத்துள்ளது. அதேபோல் முத்து தனது உழைப்பில் சேர்த்த பணத்தில் தனது மனைவி மீனாவுக்கு தாலி வாங்கி கொண்டு வந்துள்ளார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் உள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியலின் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடில் ’இன்று வேலை இல்லாமல் நீ வீட்டுக்கு வரக்கூடாது’ என்று கறாராக ரோகிணி மனோஜ் இடம் சொல்கிறார்

இதனை அடுத்து பல இடங்களில் வேலை தேடியும் கிடைக்காத நிலையில் ஒரு ஹோட்டலில் வேலை காலி என்று அறிவிப்பு பலகையை பார்த்து உள்ளே சென்று வேலை கேட்கிறார். இங்கே சப்ளையர் மற்றும் ஆர்டர் எடுக்கும் வேலை மட்டும் தான் உள்ளது என்று கூறிய நிலையில் ஆர்டர் எடுக்கும் வேலையை செய்கிறேன் என்று கூறுகிறார்

இந்த நிலையில் வீட்டிற்கு வரும் மனோஜ் வேலை கிடைத்து விட்டதாக பெருமையாக கூறிய நிலையில் விஜயா மற்றும் அண்ணாமலை மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் முதல் நாளில் கிடைத்த சம்பளத்தில் தனது மனைவிக்கு அல்வா வாங்கி கொண்டு வந்திருப்பதாகவும் மனோஜ் கூறுகிறார்.

அப்போது முத்து, ‘எந்த நிறுவனத்திலும் முதல் நாள் சம்பளம் கொடுக்க மாட்டார்களே, தினக்கூலியாக வேலை பார்த்தால் மட்டுமே ஒவ்வொரு நாளும் சம்பளம் கொடுப்பார்கள் என்று சந்தேகத்தை எழுப்புகிறார். இதனை அடுத்து மனோஜை தனியாக அழைத்து செல்லும் ரோகிணி ’என்ன வேலையில் சேர்ந்து இருக்கிறாய்? என்று கேட்க அவர் ’உனக்காக நான் என்னுடைய திறமைக்கு மதிப்பில்லாத வேலையில் தான் சேர்ந்திருக்கிறேன், இருப்பினும் விரைவில் நல்ல வேலையை தேடிக்கொள்வேன் என்று சமாதானம் கூறியதோடு, தான் ஹோட்டலில் வேலை செய்வதை மறைக்கிறார்.

இந்த நிலையில் மீனா தனது பூக்கடையில் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் நிலையில் கஸ்டமர் ஒருவர் வந்து ’ஏன் மஞ்ச கயிறு தாலி கட்டியிருக்கிறாய்? நீ பெரிய வீட்டில் தானே வாக்குப்பட்டு போயிருக்கிறாய்? என்று கேட்க, தனது மாமியாரை குறைத்து சொல்லாமல் ஏதேதோ சொல்லி மீனா சமாளிக்கிறார்.

இந்த நிலையில் முத்து தனது மனைவிக்கு தன்னுடைய சொந்த சம்பாத்தியத்தில் தாலி வாங்கிக் கொண்டு வந்ததை அண்ணாமலை மற்றும் விஜயாவிடம் காண்பிக்கும் காட்சிகள் ப்ரோமோவாக இன்றைய எபிசோடு இறுதியில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment